"No Real Change in History has ever achieved by Discussions"
சூழ்ச்சிகளால் பெற்ற எதுவும் !
சூழ் கொடு சாகும்.


Font Size

Wednesday, June 18, 2014

வட்டிக்காரன்




படு பாவி பய  !
இடியமீன் மகன் !
பத்து வட்டி போட்டான்.
என் பட்டாவையும் கேட்டான்.
பாவம் கூட பார்க்காம !
என் மாராப்பையும் பார்த்தான் !
பச்ச புள்ள குடிக்க  பால் மார்பில் இல்ல !
மாற்று பால் வாங்குற வக்கும் என்னிடம் இல்ல !
பத்துக்குபத்து குழி வெட்ட தோன்றுது மனசு!
ஆனா பெத்த புள்ளைய நினைச்சு கலங்குது மனசு  !
பத்தரை மாத்து தங்கம் பசியில் மயங்கிடுச்சி !
பத்தரை மணிக்கு தூங்கி ரொம்ப நாள் ஆச்சி !
துக்கதில தூக்கம் வந்தா தூங்கி விடலாம் !
தூக்கதிலும் துக்கம் வந்தா என்ன நான் செய்ய !
பொழுதும் விடிந்து விடுமே !
பசிக்க துவங்கி விடுமே !
கடவுள் ஓன்று இருந்தால்
அவன் கண்ணை குத்தனுமே!
நீ எங்கே போன  சாமி !
ஏன் கல்லாய் ஆனாய் சாமி!



0 comments: